பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராப், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, சென்னையில் ஒரு நாள் ஆகிய தமிழ் படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சேரன்.
இவரை கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் காணமுடிந்தத. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுதே தவமாய் தவமிருந்து குடும்பம் சார்ந்த கதையை தயாரித்து வைத்திருப்பதாகவும், அந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அதையடுத்து இவரின் அடுத்த படத்தை குறித்த எந்த தகவலும் வெளியே வரவில்லை.

ஆனால் இப்பொழுது தன் டிவிட்டர் பக்கத்தில், “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்..” மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/directorcheran/status/1246386698289704960









