---Advertisement---

உயிர் பலி வாங்கிய ஷவர்மா… நீதிமன்றம் சென்று இழப்பீடு கேட்கும் தாய்…

Published on: June 20, 2024
shawarma
---Advertisement---

நிற்க நேரமில்லாமல் தங்களது ஆசை, கனவு, லட்சியத்தை நோக்கிய ஓட்டத்தில் இன்றைய இளைஞர்கள். பசிக்கு சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதே தவிர ருசித்து உண்ணுவது குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமையலறையில் நேரம் செலவழித்து தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்ட காலம் மாறி. ஆன்-லைனில் ஆர்டர் சொல்லி சாப்பாட்டை இருக்குமிடம் தேடி வரவழைத்து விட்டது நாகரீக வாழ்க்கை.

fast food
fast food

ஆரோக்கியம் குறைவான ஃபாஸ்ட் ஃபூட் வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் பற்றி  எத்தனையோ விதமான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறார்கள். இதனால் ஹார்மோன் இம்பேலன்ஸ்கள் ஏற்பட்டு, ஆரோக்கியம் குறித்த கோளாறுகளை  ஏற்படுத்தியும் விடுகிறது ஒரு சில ஃபாஸ்ட் ஃபூட் வகைகள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது போன்ற உணவை சாப்பிட்டு உயிர் பறிபோன சோக நிகழ்வும் நடந்தது.

உணவு விடுதி ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த பதினான்கு வயது மாணவி கலையரசியின் உயிர் பறிபோனது. அவரை போலவே அதே உணவகத்தில் சாப்பிட்ட நாற்பத்தி மூன்று பேரும் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த கலையரசியின் தாயார் பாதிப்பிற்குள்ளான நாற்பத்தி மூன்று பேருக்கும் ரூபாய் ஐம்பது லட்சத்தை இழப்பீடாக வழங்கக்கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பொது நல வழக்காக இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி உணவக உரிமையாளர், மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோரை வருகிற ஜூலை மாதம் பத்தொன்பதாம் தேதி ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக இறப்பு சம்பவம் நடந்ததும் குறிப்பிட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதோடு, நாமக்கல் மாவட்ட முழுவதும் சிக்கன் ஷவர்மா விற்க தற்காலிக தடை போடப்பட்டது. தனது மகள் உயிர் பறிபோய் விட்ட நிலையில் யார் என்றே தெரியாத பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நீதி கேட்டுள்ளார் கலையரசியின் தாய்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!