---Advertisement---

இந்த இன்ஸ்ட்ருமெண்ட்ஸ எல்லாம் இளையராஜா பார்த்தது கூட கிடையாது…பாரதிராஜா கொடுத்த ஸ்டேட்மெண்ட்…

Published on: May 17, 2024
ilayaraaja
---Advertisement---

“அன்னக்கிளி” படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் இளையராஜா. அவரது பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்க அந்த மயக்கத்திலே இருப்பவர்களால் இன்றும் அவர் இசைஞானியாக பார்க்கப்படும் அளவில் இருக்கிறார்.

இளையராஜாவின் பாடல்கள் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் அதனை கேட்க  ஆர்வமாக காத்து நின்றவர்களின் எண்ணிக்கையோ ஏராளம். அடுத்த படத்தை அவர் எப்பொழுது பண்ணுவார் அவர் பாடல் எப்பொழுது வெளியாகும் என ஒன்று கூடி கிடந்தவர்களும் பலர்.

பாரதிராஜாவின் “16வயதினிலே” இன்றும் அவரின் பெயரை சொல்லவைக்கிறது. நாளடைவில் இவர்கள் இருவரிடையே கூட்டணி உருவானது.

தொடர்ச்சியாக வந்த இவர்களின் படங்கள் எல்லாமே வெற்றியாக மாறியது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசையும் கூட என சொல்லலாம்.

“முதல் மரியாதை”,  “கல்லுக்குள் ஈரம்” என வரிசையாக வந்த படங்கள் எல்லாம் பேசும்பொருள்களாக மாறி, அன்றாட உணவு போல அத்தியாவசியமான ஒன்றாக நினைக்க வைத்தது. ஒரு நேரத்தில் எங்கு பார்த்தாலும் இந்த இருவர் கூட்டணியின் படைப்புகள் தான் காதுகளை வலம் வந்தது.

ilayaraja
ilayaraja

வெஸ்டர்ன் இசைக்கருவிகளை இளையராஜா பார்த்தது கூட கிடையாது. புல்லாங்குழலில் ஒரு இசையை கொண்டு வர வேண்டும் என்றால் அவர் ஆற்றங்கரைக்கு சென்று அங்கே உள்ள மரங்கலின் மூலம் கருவிகளை செய்து, அதில் துளையிட்டு இசையை உருவாக்குவாராம்.

அதேபோல தனது வீட்டில் உள்ள இரு தூண்களுக்கு நடுவே கம்பிகளை இறுக்கமாக கட்டி அதில் இசை மீட்டுவாராம். இந்த ஆர்வமும், இசை மீது அவருக்கு இருந்த அலாதி பிரியமும் தான் அவரை இன்று இந்த அளவில் உயர்த்தி உள்ளது என பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.