பேட்டை படத்தின் மூலம் முதல் படத்திலே சூப்பர் ஸ்டாருடன் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் மாளவிகா மோகனன். பேட்டை படத்தை தொடர்ந்து, இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகமே கொரொனா பிடியில் சிக்கித் தவிப்பதால், இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு பல்வேறு ஊடகங்கள் மூலம் கொரொனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஒரு சின்ன மெசேஜை தெரிவித்துள்ளார். அதன்படி, எல்லோரும் சானிட்டீசரைப் பயன்படுத்துங்கள், கைகளை கழுவுங்கள், இந்த போட்டோவுல என்ன போல வெளியே போகாமல், எல்லாரும் வீட்ல பத்திரமா இருங்க!! என்ற சிம்பிள்ளான குவாரண்டின் மெசேஜை பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-rn5VrgBN7/?utm_source=ig_embed&utm_campaign=loading








