ரம்யா பாண்டியன் – சேலையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் எடுத்து இளசுகளுக்கு இடுப்பழகி ரம்யா பாண்டியனாக பிரபலமானார். பின்பு இவரை தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர் ஆகவும் நடுவராகவும் ரசிகர்களுக்கு தன் முகத்தை காட்டி கொண்டு வருகிறார்.
ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர், ஆண்தேவதை முதலிய படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வசியம் செய்து கொண்டு வருகிறார்.
தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் இன்னும் சற்று ஆக்டிவாக ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைத்தளத்தின் மூலம் பதில் அளித்து உள்ளார்.
அதில், ரசிகர் ஒருவர் அடுத்த படவாய்ப்புகளை பற்றி கேட்ட கேள்விக்கு, “சூர்யாவின் 2D பிக்சர்ஸ் தயாரிக்கம் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளதாக” ரசிகருக்கு மெர்சலான பதில் அள்ளித்துள்ளார்.









