தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் புதிய திரைப்படமான ‘சேயோன்’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View this post on Instagram
“ஆடி வெள்ளி பூத்திருச்சு, புது பொழுது விடிஞ்சிருச்சு, சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு” என்ற கவித்துவமான மற்றும் உற்சாகமான வரிகளுடன், படக்குழுவினர் தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறப்பு ரீல்ஸ் (Reels) வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தளத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













