தென்னிந்தியத் திரையுலகில் கமர்ஷியல் மற்றும் பக்கா காமெடி என்டர்டெய்னர் திரைப்படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் அனில் ரவிபுடி (Anil Ravipudi). தற்பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் வகையில், விக்டரி வெங்கடேஷ் (Venkatesh) மற்றும் நந்தமூரி கல்யாண் ராம் (Nandamuri Kalyan Ram) ஆகிய இரு பெரும் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களை இணைத்து தனது புதிய திரைப்படத்தின் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். வெங்கடேஷின் 79-வது படமாகவும், கல்யாண் ராமின் 22-வது படமாகவும் உருவாகும் இத்திரைப்படம் தற்காலிகமாக ‘#VenkyAnil5’ மற்றும் ‘#NKRAR2’ என அழைக்கப்பட்டு, இதன் பிரம்மாண்டமான தொடக்க விழா மற்றும் பூஜை தற்பொழுது கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் அனில் ரவிபுடி, “திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விப்பதை விட எனக்கு வேறு எதுவும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துவிடாது. மிகுந்த மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வுடன் எங்களது புதிய திரைப்படத்தின் பயணத்தை இன்று முதல் துவங்குகிறோம். இந்தத் தொடக்க விழாவிற்கு நேரில் வந்து எங்களை வாழ்த்திய அனைத்து மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று மிகவும் எமோஷனலாகத் தெரிவித்துள்ளார்.
Nothing gives me greater joy than entertaining audiences in theatres. ❤️
With immense happiness, gratitude, and a sense of responsibility, we begin the journey of #VenkyAnil5 – #NKRAR2 today. ❤️🔥
Heartfelt thanks to all our honourable guests for gracing the ceremony and making… pic.twitter.com/UwECcVGUYC
— Anil Ravipudi (@AnilRavipudi) June 18, 2026
இத்திரைப்படத்தின் வியாபார மற்றும் கமர்ஷியல் மதிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) மற்றும் இளம் திறமையான நடிகை கிருத்தி ஷெட்டி (Krithi Shetty) ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அனில் ரவிபுடியின் வழக்கமான டிரேட்மார்க் பாணியிலான அதிரடி ஆக்ஷன், குடும்பக் கதளம் மற்றும் எக்கச்சக்கமான நகைச்சுவை நிறைந்த ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக இத்திரைப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணித் திரைப்படங்களைத் தயாரித்து வரும் சைன் ஸ்கிரீன்ஸ் (Shine Screens) சார்பில் சாகு கராபதி மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் (Suresh Productions) உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் சவுத் (Zee Studios South) நிறுவனம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்பொழுது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் மிக விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் மிகக் குறுகிய காலத்திற்குள் முடித்துவிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.













