திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் எப்போதுமே ஒரு முக்கியமான படம் ரிலீஸானாலோ அல்லது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விசேஷம் என்றாலோ திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தனது புதிய திரைப்படமான பெத்தி படத்தின் அசுர வெற்றிக்காக அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது குறித்து நடிகை ஜான்வி கபூர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். திருப்பதி திருமலையில் ஏழுமலையானின் ஆசீர்வாதத்தைப் பெற்றதில் தொடங்கி தற்பொழுது தியேட்டர்களில் தங்களது பெத்தி திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் பேராதரவையும் அன்பையும் பார்ப்பது வரை எல்லாமே “திருப்பதி பாலாஜியின் ஆசீர்வாதம்” இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
From seeking Lord Balaji’s blessings at Tirumala 🙏✨
To witnessing the love for #Peddi 💜
Forever grateful 🙏🤍#JanhviKapoor #PEDDI pic.twitter.com/j8o7iy5HNQ
— Jahnavi Kapoor (@JanhvikapoorFC_) June 4, 2026
இந்த பிரம்மாண்டமான வெற்றிக்காகவும் ரசிகர்கள் காட்டும் அளவற்ற அன்புக்காகவும் தான் எப்போதும் கடமைப்பட்டிருப்பதாக ஜான்வி கபூர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பெத்தி திரைப்படத்தில் ஜான்வி கபூரின் நடிப்பு தற்பொழுது சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு வரும் வேளையில் அவரின் இந்த லேட்டஸ்ட் ஆன்மீகப் பயணம் மற்றும் நன்றிப் பதிவு தற்பொழுது இணையத்தில் செம வைரலாகப் பரவி வருகிறது.













