தமிழ் திரையுலகில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர் தான் நடிகை சுவாதி ரெட்டி (Swathi Reddy).
எப்போதுமே வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரோட எதார்த்தமான பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கு. இந்த நிலையில, தற்போதைய காலகட்டத்துல இருக்குற திருமண வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்து சுவாதி ரெட்டி பேசியுள்ள ஒரு அதிரடி கருத்து சோசியல் மீடியா முழுக்க இப்போ செம ட்ரெண்டாகி பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தனது திருமண வாழ்க்கை மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்து ஓப்பனாகப் பேசிய சுவாதி, “இந்த காலத்துல ஒருத்தரை முழுமையா நம்பி, கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அவங்களோட வாழ்நாள் முழுக்க ஒண்ணா சேர்ந்து வாழ்றதுங்குறது ரொம்பவே கஷ்டமான ஒரு விஷயமா மாறிடுச்சு” அப்படின்னு சொல்லியிருக்காங்க. இப்போ இருக்குற யாருக்கும் யாருமே விட்டுக்கொடுத்துப் போறதுக்கோ அல்லது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கோ கொஞ்சம் கூட பொறுமை இல்லைன்னு சுவாதி வருத்தத்தோடு சுட்டிக்காட்டியிருக்காங்க.

மேலும் பேசிய சுவாதி, “யாரையாச்சும் ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு தினமும் நம்மளோட மனநிம்மதியை இழக்குறதுக்கு.. வீட்ல ஒரு நாய்க்குட்டியை வளர்த்துட்டு ரொம்ப சந்தோஷமா இருக்குறது எவ்வளவோ மேலானது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். நாய் எப்போதுமே நமக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும், அதுமட்டுமில்லாம எந்தவொரு நிபந்தனையும் இல்லாம நம்ம மேல எப்போதுமே பாசத்தை மட்டுமே பொழியும்னு சுவாதி ரெட்டி ரொம்பவே எதார்த்தமா பேசியிருக்காங்க. ஒரு மனிதனை நம்பி ஏமாறுவதை விட நாய் வளர்ப்பதே நிம்மதி என்கிற அவரோட இந்த பேச்சு இப்போ நெட்டிசன்கள் மத்தியில பயங்கரமா பேசப்பட்டு வருது.
சுவாதி ரெட்டியோட இந்த போல்டான ஸ்டேட்மெண்ட்க்கு, சிலர் அவரோட கருத்துக்கு ஆதரவாக கமெண்ட் செஞ்சுட்டு வர்றாங்க, இன்னும் சிலர் தற்போதைய காலத்து வாழ்க்கை முறைக்கு இதுதான் உண்மை அப்படின்னும் பேசி வர்றாங்க. நடிகை சுவாதி ரெட்டியோட இந்த லேட்டஸ்ட் வைரல் இன்டர்வியூ தான் இப்போ கோலிவுட் ஏரியாவுல டாப் ட்ரெண்டிங் நியூஸா போயிட்டு இருக்கு.













