தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் ஜெய் (Jai), தனது அடுத்த படமான ‘சட்டென்று மாறுது வானிலை’ (Sattendru Maaruthu Vaanilai) படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்த ஒரு விஷயம், அரங்கத்தையே அதிர வைத்தது மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் (Vijay) தனது ரசிகர்களைப் பார்த்து எப்போதும் கூறும் “என் நெஞ்சில் குடியிருக்கும்…” என்ற அதே டிரேட்மார்க் வாசகத்துடன் ஜெய் தனது பேச்சைத் தொடங்கினார். விஜய்யின் அதே உடல்மொழி மற்றும் குரல் தொனியில் ஜெய் பேசியது, அங்கிருந்த ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் இளைய தளபதியையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது.
View this post on Instagram
முதலமைச்சரை முன்னுதாரணமாகக் கொண்ட கதாபாத்திரம்
தொடர்ந்து பேசிய ஜெய், “இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் தமிழக முதலமைச்சர் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அவரை மேற்கோள் காட்டிப் பல சுவாரஸ்யமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன” என ஒரு ரகசியத்தை உடைத்தார்.
நிஜ வாழ்க்கையில் விஜய் ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைச் செய்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், திரையிலும் அவரைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
ட்ரெண்டாகும் ‘சட்டென்று மாறுது வானிலை’
ஜெய் மற்றும் விஜய்க்கு இடையே எப்போதுமே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. விஜய்யின் ‘பகவதி’ படத்தில் அவருக்குத் தம்பியாக நடித்து அறிமுகமானவர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பாணியில் ஜெய் தனது படத்தில் சிஎம் விஜய்யைப் போற்றும் விதமாகக் காட்சிகள் வைத்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
விரைவில் வெளியாகவுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.













