தமிழ் ஓடிடி உலகையே மிரட்டிய ‘விலங்கு’ சீரிஸின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ‘வாரண்ட்’ (Warrant) குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இன்று மாலை 5:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.
விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், பிரசாந்த் பாண்டியராஜின் மேற்பார்வையில் உருவாகியுள்ள இந்த சீரிஸ், ‘விலங்கு’ படத்தில் நாம் பார்த்த அதே த்ரில்லர் உலகத்தின் ஒரு புதிய பரிமாணமாக இருக்கும். ‘வாரண்ட்’ என்ற தலைப்பிலேயே இது ஒரு அதிரடியான போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்தப் படத்திற்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார், இது தொடருக்கு ஒரு கூடுதல் பலமாக அமையும்.
View this post on Instagram
விலங்கு படத்தின் தொடர்ச்சி: 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ‘விலங்கு’ சீரிஸின் தாக்கத்தில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு, இந்த ‘வாரண்ட்’ சீரிஸ் ஒரு பெரிய விருந்தாக அமையும். முதல் பாகத்தைப் போலவே இதிலும் விறுவிறுப்பான காட்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு ஜி.வி. பிரகாஷ் கையால் வெளியாக உள்ளதால், இணையதளங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்: இந்த ‘வாரண்ட்’ வெப் சீரிஸ் வரும் மே 22, 2026 முதல் ஜீ5 (Zee5) தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஒரு மர்மமான கொலை வழக்கு, காவல்துறையின் அதிரடி விசாரணை என ஒரு முழுமையான கிரைம் த்ரில்லர் அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகிவிட்டது. இன்று வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்களையும் தாங்கி வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













