சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவு இவரிடம் படம் வரவில்லை.
எல்லா படங்களும் தோல்வி முகங்களாகவே இருந்தன பெரிய அளவில் முன்னணி நடிகராக சோபிக்க முடியாமல் இருந்தார்.
பாலா இயக்கிய நந்தா படமே சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு பாலா இயக்கிய பிதாமகன் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் சூர்யாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.
அதன் பிறகு 18 வருடங்களுக்கு பிறகு சூர்யா பாலா கூட்டணி இணைகிறது. இதை கூறியுள்ள சூர்யா 18 வருடங்களுக்கு பிறகு அண்ணன் ஆக்சன் சொல்வதை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.







