உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வருடம் முன்பு வரை சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். சைக்கோ படத்துக்கு பிறகு அதிகம் இவர் சினிமா பக்கம் காணவில்லை.
இந்த நிலையில் தேர்தல் வேறு வந்துவிட்டது ஒரு பக்கம் தேர்தல் பணியை கவனித்தார். மறுபக்கம் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார். ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருந்து அனைத்தையும் இவர் கவனித்துக்கொள்கிறார்.
கைவசம் மூன்று படங்கள் மட்டுமே வைத்திருக்கிறாராம். இதில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தோடு சினிமாவில் நடிப்பது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.









