ஜி.வி பிரகாஷுடன் சர்வம் தாள மயம் படத்தில் ஜோடியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. பிறகு இவர் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகையானார்.
இவர் தற்போது அசோக் செல்வனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அசோக் செல்வன் தயாரிக்கும் புதிய படத்துக்கு புரொடக்சன் 5 என்று மட்டும் தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை ஆர் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி மற்றும் அசோக் செல்வனுடன் ரிதுவர்மா இணைந்து நடிக்கிறார்.
Thankful and beyond blessed to be a part of this ❤️@AshokSelvan@riturv @Aparnabala2 @ShivathmikaR
@Rkarthik_dir@PentelaSagar @george_dop @GopiSundarOffl @editoranthony@riseeastcre@AndhareAjit #Viacom18Studios pic.twitter.com/dWGn2I5mPP
— Aparna Balamurali (@Aparnabala2) June 28, 2021







