நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து வந்த இரு வாரிசுகள் நடிப்பில் முழுமையாக சோபிக்காமல் சினிமாவை மறந்து விட்டனர்.
விக்ரம் பிரபு மட்டுமே தொடர்ந்து தான் நடிக்க வந்த முதல் படத்தில் ஆரம்பித்து கஷ்டப்பட்டு தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார். இருப்பினும் ஆரம்பத்தில் வந்த கும்கி, சிகரம் தொடு போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. தொடர்ந்து வந்த அவரின் பல படங்கள் தோல்வியை மட்டுமே தழுவின.
நீண்ட காலமாக ரீ எண்ட்ரிக்காக போராடி கொண்டிருக்கும் விக்ரம் பிரபு தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
பாயும் ஒளி நீ எனக்கு என்ற இந்த படத்தை இயக்குபவர் கார்த்தி செளத்ரி.உடன் வாணி போஜன் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பரில் துவங்குகிறது.







