---Advertisement---

37 வருடங்களுக்கு பிறகு சசிக்குமார் நடிப்பில் மீண்டும் முந்தானை முடிச்சு

Published on: September 19, 2020
---Advertisement---

இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜின் திரை வரலாற்றில் இப்படம் ஒரு மைல்கல் என சொல்லலாம்.

இப்படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும் வரவேற்பு பெற்றது. தியேட்டருக்கு பெண்கள் சாரை சாரையாய் சென்று இப்படத்தை பார்த்தனர்.

இளையராஜா இசையமைத்த இப்படத்தில் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஏவிஎம் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.

இப்போது கே. பாக்யராஜிடம் அனுமதி பெற்று அதே படத்தை திரும்ப தயாரிக்கப்பட இருக்கிறது. பாக்யராஜே கதை திரைக்கதை , இயக்கம் மட்டும் சசிக்குமார் மேற்கொள்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஸ் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஐஸ்வர்யா ராஜேஸ் கூறியுள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.