அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிகுமார். “சுப்ரமணியபுரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இவர்.
அந்த படத்தின் கதாநாயகனும் இவரே. அதன் பிறகு “நாடோடிகள்” , “குட்டிப்புலி” என படம் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்போதும் வெற்றிகரமான ஹீரோவாகத்தான் இருக்கிறார் தமிழ் சினிமாவில்.
“விடுதலை” படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியவர் சூரி. இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பின்னர் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் “கருடன்” படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியன் சூரி ஒரு லெவல் என்றால் ஹீரோ சூரி வேறு ஒரு லெவலாக ஜொலிக்கிறார்.
சூரி, சசிகுமார் நடித்திருக்கும் “கருடன்” படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அதில் பேசிய சசிகுமார் இப்போதெல்லாம் தோல்வி அடைந்த படங்களுக்கு தான் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.
உண்மையை சொல்லப்போனால் வெற்றி விழா எடுக்கப்படும் படங்களில் அதிகம் தோல்வியை தழுவியதாகத்தான் இருக்கிறது.
படம் தோல்வி என தெரியவந்தால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அடுத்த படத்தில் ஜெயிக்க முடியும். அதை விட்டு விட்டு காரணம் தேட கூடாது என சொன்னார்.

“கருடன்” படத்தின் சக்சஸ் மீட் என்பதற்கு பதில் நன்றி சொல்லும் விழா என சொன்னால் நன்றாக இருக்கும் என சசிகுமார் கேட்டுக்கொண்டதையடுத்து மேடைக்கு பின்னால் இருந்த எல்.ஈ.டி.
திரையில் நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்பட்டது. “கருடன்” பட வெற்றிக்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் தான் எனவும் சொன்னார் சசிகுமார். அதோடு சூரிக்காக மட்டுமே “கருடன்” படத்தில் நடிக்க தான் ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார்.
சசிகுமார் படத்தில் தான் நடித்தால் தான், அவர் சூரி படத்தில் நடித்ததாக சொல்வது குறித்து பேசிய சூரி, சசிகுமார் படத்தில் நடித்தது போன்ற ஃபீல் தான் தனக்கு இருந்ததே தவிர, சூரி படத்தில் சசிகுமார் நடித்தது போல இல்லை என சொல்லியிருந்தார்.









