இரட்டை வேடங்களில் கமல் நடித்து ஷங்கர் இயக்கிய படம் “இந்தியன்”. இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தில் தகப்பன் – மகன் என இரண்டு விதமான மாறுபட்ட நடிப்பில் அசத்திருயிருந்தார் கமல்.
சேனாபதி கமல் நாட்டின் நலனுக்காக ஊழல்வாதிகளை தேடிச்சென்று கொல்லும் கேரக்டரில் நடித்திருந்தார். இவரது கெட்டப்பிற்கு மேக்-அப் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக அமைந்ததோ, அதே போல தான் வர்ம கலையால் கொலை செய்யும் காட்சிகளும் அமைந்தது.
ரஜேந்திரன் என்கின்ற வர்மக்கலை ஆசான் எழுதிய புத்தகத்தின் மீது வந்த ஈர்ப்பினால் தான் படத்தில் வர்ம கலை சேர்க்கப்பட்டது. அதுவே படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக மாறியது.
ஆசான் ராஜேந்திரன் முதல் பாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு கமலுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இதே வர்ம கலையை தான் “இந்தியன் – 2” பாகத்திலும் பயன்படுத்தியுள்ளாராம் படத்தின் இயக்குனர் ஷங்கர்.

சொல்லப்போனால் முதல் பாகத்தை விட இதில் தான் வர்ம கலையின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். முதல் பாகத்தில் தனக்கு கொடுக்க வேண்டிய சரியான மரியாதையை கொடுத்த படக்குழு, இரண்டாம் பாகத்தில் கொடுக்க வில்லையாம்.
இதனால் ராஜேந்திரன் “இந்தியன்-2” பட இயக்குனர், தயாரிப்பளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். குறிப்பிட்ட ஒரு முத்திரையை பயன்படுத்தியிருக்கிறாராம் படத்தில் கமல்.
அந்த முத்திரை முழுவதுமாக தனது கண்டுபிடிப்பு அதனால் அதனை பயன்படுத்த தன்னிடம் கேட்டிருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறாராம் வர்ம கலை ஆசான் ராஜேந்திரன்.
ஒருவேளை இந்த விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய்விடுமோ? என்ற கவலை தாத்தா ரசிகர்களை தொற்றியுள்ளது இப்போது. ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியது குறித்த தகவல்களை பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருந்தார்.








