மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாண இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘இருமுடி’ (Irumudi). பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வரும் இப்படம், தற்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இப்படத்தில் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை எதிர்மறையான முறையில் சித்தரிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஆந்திரப் பிரதேச உனுபாத்தியாய சமாக்கியா (APTF) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏபிடிஎஃப் மாநில தலைவர் சென்னபதி மஞ்சுலா மற்றும் பொதுச் செயலாளர் பவசலிங்காராவ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “சினிமா என்பது சமூகத்தை சக்திமந்தமாகப் மாற்றக்கக்கூடிய ஒரு ஊடகம். ஆனால் இப்படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் கல்விக்கூடங்களை மிகவும் தரம் தாழ்த்தி காட்டியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் சீரேலு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி பெயரைக் குறிப்பிடும் வகையிலும், ஆந்திர அரசுப் பள்ளி மாணவர்கள் அணியும் அதே சீருடையை (Uniform) பயன்படுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களின் கவுரவத்தைக் குலைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அந்த அப்பட்டமான காட்சிகளை உடனடியாகத் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தீவிர போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம், வசூலில் சக்கைப்போடு போட்டு வரும் இப்படத்தின் குழுவினர் இந்த சர்ச்சை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதும் பதிலளிக்கவில்லை.













