தமிழ் சினிமாவுல அண்மையில வெளியாகி தியேட்டர்கள்ல ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திட்டு இருக்குற திரைப்படம் தான் ‘கருப்பு’.
எந்தவொரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாம வந்து இப்போ பிளாக்பஸ்டர் ஹிட் அடிச்சிருக்குற இந்த படத்தோட வெற்றியை ஒட்டுமொத்த கோலிவுட்டே கொண்டாடியிருக்கு. இந்த நிலையில, இந்த படத்தோட இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் தங்களது சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்சியமான விபரங்களை ஓப்பனா பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “எனக்கு கடவுள் மீது எப்போதுமே ரொம்பவே பலமான ஒரு நம்பிக்கை இருக்கு. இந்த படத்தோட ஆரம்பக்கட்ட வேலைகள்ல இருக்கும்போது, வெளியில இருக்குற மக்கள் யாரும் எங்களை பெருசா நம்பல, ஆனா நாங்க எங்களை முதல்ல முழுமையா நம்புனோம்” அப்படின்னு ரொம்பவே எதார்த்தமா சொல்லியிருக்காரு. ஆரம்பத்துல பல தடைகளைத் தாண்டி தங்களது திறமை மீது மட்டுமே நம்பிக்கை வச்சு களம் இறங்கியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்த படம் கண்டிப்பா ரொம்ப நல்லா வரும், மக்கள் எல்லாரும் இந்த படத்தை கண்டிப்பா கொண்டாடுவாங்கன்னு நாங்க ஒரு டீமா இந்த கதையின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வச்சிருந்தோம்” எனத் தெரிவித்துள்ளார். அவங்க வச்ச அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் இப்போ தியேட்டர்கள்ல ரசிகர்களின் பேராதரவோடு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியா எதிரொலிச்சுட்டு இருக்கு.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்குற ‘கருப்பு’ படத்தின் 2ஆம் பாகம் (Karuppu Part 2) கண்டிப்பாக உருவாகும் என்கிற மாஸான கன்பர்மேஷனையும் அவரே கொடுத்துள்ளார். “ஆமாம், கண்டிப்பா கருப்பு பார்ட் 2 வரும். ஆனா, தற்போதைக்கு நான் இன்னும் அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் மற்றும் கதை எழுதும் வேலைகளை முறைப்படி ஸ்டார்ட் பண்ணல” என்று ஆர்.ஜே.பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
விரைவில் இதற்கான முறையான அறிவிப்புகள் வெளியாகும்னு சொல்லப்படுது. இப்போ பார்ட் 2 வர்ற விபரம் தெரிஞ்சு சோசியல் மீடியா சினிமா குரூப்கள்ல இப்போதிருந்தே செம ஹைப் ஏத்த தொடங்கிட்டாங்க.













Swathi Reddy’s Bold Marriage Comment! — “கல்யாணம் பண்ணி நிம்மதியை இழக்கரதவிட — நாய் வளர்ப்பதே பெட்டர்!”; ஓப்பனாகப் பேசிய சுவாதி ரெட்டி!