மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்தாலும் இவர் ஒரு கார்ப்பரேட் சமையல்காரர் என சொல்லலாம்.
இயக்குனர் சங்கர் வீட்டு விசேஷத்தில் இருந்து எண்ணற்ற தமிழ் சினிமா கலைஞர்கள் வீட்டு விசேஷத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல்.
குறுகிய காலத்தில் அனைத்து மீடியாக்களும் இவரை உயரத்தில் தூக்கி உட்கார வைத்துவிட, வந்தது வினை.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிருஸ்டில்டா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தது. இவரின் முதல் மனைவியை இவர் விவாகரத்து செய்யாத நிலையில் இந்த இரண்டாவது திருமணத்தை இவர் தவறான முறையில் செய்து இருக்கிறார்.
இதுகுறித்து பிரபல சட்டவியலாளர் சாந்தகுமாரி என்பவர் ஊடக நிகழ்ச்சியில் பேசும்போது, மாதம்பட்டி ரங்கராஜ் செய்தது தவறுதான், இருப்பினும் அந்த ஆடை வடிவமைப்பாளர் செய்தது மிகப்பெரிய தவறு . இப்போது இருக்கும் காலத்தில் google கூட செய்து பார்க்கலாம் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா ஆகவில்லையா என்று, ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, இருவரும் உடல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டு குழந்தையும் பெற இருக்கிறார் ஜாய் கிறிஸ்டில்டா, இது கோர்ட்டுக்கு போனால் இந்த வழக்கு நிற்காது. முறைப்படி முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவே இல்லை, இதை இது ஜாய் கிறிஸ்டிடா விசாரிக்காமலேயே திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த நாகரிக காலத்தில் ஒரு google செய்து கூட பார்க்கவில்லையா என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆக திருமணமானவர் என தெரிந்தும் இந்த திருமணத்தை செய்து வேறு ஏதோ நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக தெரிகிறது.
அதனால் கோர்ட்டுக்கு போனால் ஜாய் கிறிஸ்டில் டா பக்கம் நியாயம் கண்டிப்பாக கிடைக்காது என வழக்கறிஞர் சாந்தகுமாரி கூறியுள்ளார்.







