ரகுவரன் இவரின் தோற்றத்திற்கும் அவர் நடித்த வேடங்களுக்கும் பெரிய அளவில் சம்பந்தம் இருக்காது என்று கூட சொல்லலாம். ரஜினி படம் ஒரு காலத்தில் தயாரகிறது என்ற செய்தி வெளிவந்தாலே வில்லன் யாரு ரகுவரனா? என ஆர்வத்தை தூண்டும் விதமாகத்தான் இந்த இருவரின் கூட்டணி அமைந்திருந்தது.
“சிவா” படத்தில் சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து சென்ற நண்பன் என தெரியாமலே ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். “அருணாச்சலம்” படத்தில் ரஜினியை வீழ்த்த நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்திருந்தார். பார்த்தவர்கள் அனைவரையுமே அம்மாடி என்னா நடிப்புடா சாமி என வியப்பில் ஆழ்த்தியிருந்தார் “பாட்ஷா” படத்தில்.
ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் துரதர்ஷ்ட விதமாக இருவரும் பிரிந்தனர். திரைத்துறையில் பழக்கம் கிடைத்து, நிஜ வாழ்வில் இணைந்து ஆனால் எதிர்பாராத காரணங்களால் தோல்வியில் முடிந்த தம்பதியரின் பட்டியலில் இவர்களின் பெயரும் சேர்ந்தது. ரோகினி ரகுவரனை பற்றி பேசியிருக்கும் போது தங்களுக்கு திருமணமான புதிதில் தன்னால் ரகுவரனை புரிந்து கொள்ள முடியவே இல்லையாம்.

திடீர், திடீரென ஆவேசமாவாராம், ஆக்ரோஷமாக பேசுவாராம். என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பி தவித்தாராம் ரோகினி. ரகுவரனின் தாயார் ரோகினியை அழைத்து ரகுவரன் நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு என்ன வேடம் கொடுத்திருக்கிறார்கள் என பார்க்கச்சொன்னாராம். அங்கே எப்படி நடிக்க வேண்டுமோ அதற்கு ஒத்திகை பார்ப்பது போல தான் வீட்டில் நடந்து கொள்வாராம். “அஞ்சலி” படத்தில் நடித்து வந்த போது மிகுந்த அமைதியோடு இருப்பாராம் வீட்டில். இதனை கேட்ட பிறகே அமைதியானாராம் ரோகினி.







