உலக ட்ராபிக் சிக்னல் தினம்… சென்னையில் இதய வடிவில் ஒளிந்த சிக்னல் லைட்… ஆச்சிரியத்தில் மக்கள்…!

உலக ட்ராபிக் சிக்னல் தினம்… சென்னையில் இதய வடிவில் ஒளிந்த சிக்னல் லைட்… ஆச்சிரியத்தில் மக்கள்…!

உலகம் முழுவதும் இன்று டிராபிக் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் டிராபிக் லைட் ஹாட் வடிவத்தில் ஒளிர்ந்து வந்தது. இது வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.

110 வருடங்களுக்கு முன்பு அதாவது 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தான் உலகின் முதல் ட்ராபிக் சிக்னல் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் ஆகஸ்ட் 5ஆம் தேதியை சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்படுகின்றது. நாம் தற்போது சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்திலான டிராபிக் சிக்னல் அமைப்பை பயன்படுத்தி வருகின்றோம்.

இதனை காவல்துறை அதிகாரியான வில்லியம் பார்ட்ஸ் என்பவர் 1920 ஆம் ஆண்டு உருவாக்கினார் என்று கூறுகிறார்கள். அவர் உருவாக்கிய டிராபிக் சிக்னல் லைட்டுகளை தான் நாம் தற்போது பல இடங்களில் டிராபிக் சிக்னலாக பயன்படுத்தி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.