ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!

உகாண்டாவை சேர்ந்த ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேக்கி மீது அவரின் காதலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உகோண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப்பந்தைய வீராங்கனை ரெபேக்கா செப்டேக்கி. இவர் கடைசியாக உகாண்டா சார்பில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மாரத்தான் பிரிவில் 44 வது இடத்தை பிடித்தார். சமீபத்தில் தான் இவர் நாடு திரும்பியிருந்தார்.

தனக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் அவரது காதலனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றார் டேனியல்.

இதில் ரெபேக்கா 75 சதவீதத்திற்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கென்யா நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.