8 நாளில் திரும்ப வேண்டியவங்க, 8 மாசம் கழிச்சு திரும்புவார்களா…? நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

8 நாளில் திரும்ப வேண்டியவங்க, 8 மாசம் கழிச்சு திரும்புவார்களா…? நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இவர் மற்றும் புட்சு வில்மோர் ஆகிய இருவரும் கடந்து ஜூன் 5ஆம் தேதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்கள். அவர்கள் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சுனிதா மற்றும் புட்சு வில்மோர் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் வில்மோர் இருவரும் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பி இருக்கின்றது.

விண்வெளி மையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா மற்றும் புட்ச் இருவரும் பூமிக்கு திரும்புவது பற்றி கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்திருக்கின்றது.

வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி சென்றவர்கள் 8 மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா மற்றும் புஷ் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்கலம் மூலமாக பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.