கோவிட் 19 தொற்று சிகிச்சை – நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட செவிலியர்கள்!

கோவிட் 19 தொற்று சிகிச்சை – நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட செவிலியர்கள்!

பிரான்ஸ் நாட்டில் மருத்துவப் பணியாளர்களை உரிய பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகளிடம் அனுப்புவதாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்சில் இதுவரை 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்ப்பட்டவர்களை அந்நாட்டின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் மருத்துவப் பணியாளர்கள் தங்களை நோயாளிகளிடம் நிர்வாணமாக அனுப்புவதாகக் குற்றச்சாட்டை தங்கள் நிலையை உணர்த்தும் விதமாக  நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். #aPoilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கயும் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.