மத்திய ஆப்பிரிக்காவில் சிறையில் இருக்கும் 260 பெண் கைதிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை ஏற்பட்டு வருவதாக ஐநா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோ ஜனநாயக அரசின் மஹாலா நகரில் மத்திய சிறை சாலை ஒன்று அமைந்திருக்கின்றது. இங்கு ஆண் கைதிகள் மட்டும் இல்லாமல் பெண் கைதிகளும் இருக்கிறார்கள். 3,000 பேர் அடைக்க வசதியுள்ள இந்த சிறையில் தற்போது 12,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அளவுக்கு அதிகமான கைதிகள் அங்கு இருப்பதால் அடிக்கடி கைதிகளிடையே மோதல், பாலியல் அத்துமிரல் ஆகியவை அரங்கேறி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 129 பேர் உயிரிழந்தார்கள். சிறை உடைப்பு முயற்சி குறித்த போலீஸ் சார்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சிறை வன்முறையின் போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் ஆண்கள் அத்துமீறி நுழைந்து ஏராளமான பெண் கைதிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கின்றது. சிறை வன்முறை சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆண் சிறை கைதிகள் பெண்கள் சிறைக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 348 பெண்களின் 268 பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதிலும், 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர் தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கின்றார். இது குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.