இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281-லிருந்து 78,003-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 363 பேர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 2,240பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரொனாவால் பலியானவர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று 11,965 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 58 டெஸ்ட் லேப்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 447 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,227 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 14ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
