கொரொனா தொற்று, இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917-ஆக அதிகரிப்பு. தமிழகத்தில், சென்னையில் அதிகபட்சமாக 28 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 2 பேர், விழுப்புரத்தில் 4 பேர், நாமக்கல் – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 24, குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 1020 ஆகும்.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 64 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,821 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 26ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
