சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.7 சொத்து உரிமையாளர்களிடமிருந்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான 2000 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சொத்து வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை என்று இரண்டு அரையாண்டு வீதம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
முதல் அரையாண்டுக்கான வரி செலுத்தாமல் அதை இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால் அதற்குத் தகுந்த அபராதம் செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 835 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்தில் 13.96 லட்சம் பேர் வரியும், 9.1 பேர் கட்டணமும் செலுத்தி இருக்கிறார்கள்.
ஆண்டுக்கு 895 கோடி ரூபாய் வசூலாக வேண்டும், ஆனால் முதல் அரையாண்டில் அதாவது 28ஆம் தேதி வரை 375 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு முதல் அரையாண்டு வரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவதற்கு மக்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.