தொடர்ந்து 3-வது நாளாக உயரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

தொடர்ந்து 3-வது நாளாக உயரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று உயர்ந்து இருக்கின்றது.

கடந்த மாதம் தொடக்கத்தின் முதலே கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை 55 ஆயிரத்தை கடந்தது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் என்பது தங்களுக்கு எட்டாக்கனியாகி விடும் என்று நினைத்து வந்தனர். இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்கம் மற்றும் வெள்ளிகளுக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்த பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. இது நகைப்பிரியவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகின்றது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து 51,440க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 6,460 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 91 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.