தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் மலைக்கு வாய்ப்பு பெறுகின்றது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கேரள கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் மலையோர பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.