Five Falls
Five Falls

வானம் கூராப்பு போட்டுருக்காமே!…காத்து வேற கலக்கலா இருக்குதாம்!…இன்றைய குற்றால சீசன் நிலவரம்….

சுற்றுலா பயணிகளுக்கு ஜூன், ஜூலை மாதங்கள் வந்து விட்டாலே குற்றாலம் நினைவுக்கு வந்து விடும். அதிலும் குறிப்பாக தென் தமிழக மக்களுக்கு குற்றால அருவிக்குளியல் என்பது அத்தியாவசியமானதாகவும் பார்க்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த குற்றால அருவிகள் சுற்றுலா தளங்களில் தனக்கென் ஒரு தனி இடத்தை வரலாற்றில் பெற்றிருக்கிறது என்பது அனனவரும் ஏற்றுக்கொள்ளும் விதமான உண்மைதான். இந்தாண்டும் எப்போதும் போல ஜுன் மாத துவக்கத்திலிருந்தே குற்றால அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கியுள்ளது.

நாள் தோறும் சின்ன, சின்ன மாற்றங்கள் இருந்து தான் வருகிறது சீசன் துவங்கியதிலிருந்து. வேலை நாட்களிலும் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட வரிசையில் காத்திருந்து தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். திங்கட்கிழமையான இன்று காலை பதினோறு மணி நிலவரப்படி எல்லா அருவிகளுலும் தண்ணீர் வரத்து இருக்கத்தான் செய்கிறது.

Courtallam
Courtallam (இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி)

நேற்றைய நிலையை விட இன்று வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. அதே நேரத்தில் இதமான  தென்றல் காற்றும் வருடிச்சென்றது. விடுமுறை நாள் என்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் குலுங்கியது குற்றாலம். ஆனால் இன்றைய நிலவரத்தில் சிறிய மாற்றம் தென்பட்டது.

நேற்றை விட இன்று குளித்து மகிழ்வதற்கான இதமான சூழலே இருந்தது. இது வரை குறைவாகவே காணப்பட்டு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருவிகளில் ஆனந்தமாக குளிக்க நினைப்பவர்களுக்கான ஏற்றதொரு நிலை தான் இன்று காலை பதினோரு மணி வரை இருந்து வந்தது. நேரம் செலவழிக்க வாய்ப்பு இருக்கக்கூடியவர்கள் இன்றைய நாளை தேர்ந்தேடுப்பது சரியாக இருக்கும்.