Connect with us

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

Latest News

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

தமிழகத்தில் தொடர்ந்து மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் வரும் ஏழாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடந்தது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் வலுவான தரைக்காற்றும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். நாளை முதல் வரும் ஏழாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது” என்று தெரிவித்து இருக்கின்றது.

More in Latest News

To Top