தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமானால் இப்படித்தான் செலுத்த வேண்டும் என்று புரிய விதிமுறையை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்துவதற்கு பொது மக்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதாவது அதிகமாக மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது , 4000க்கும் அதிகமான மின்கட்டணத்தை இனி ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்து இருக்கின்றது. இதுவே இனி வரும் காலங்களில் 3000 மற்றும் 2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்து இருக்கின்றது.