---Advertisement---

நித்யானந்தாவின் ஆன்மீக உரை… ரொம்ப சிறப்பாக இருக்கும்… உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…!

Published on: September 4, 2024
---Advertisement---

நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்திருக்கின்றார்.

நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 4  மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமிப்பதாக மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இது தொடர்பாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த 4 மடங்களையும் நியமிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனது பெண் சீடர் உமாதேவிக்கு பொது அதிகாரம் வழங்கிய நித்தியானந்தா இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உமாதேவிக்கு வழங்கப்பட்ட பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் இருக்கின்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த நித்தியானந்தா ஆஜராக வேண்டும் என்று மனுதாரரிடம் நீதிபதி தெரிவித்திருந்தார்.

தற்போது நித்தியானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று மனதார பதிலளித்தார். அதற்கு நீதிபதி நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரிய வேண்டும். அவரை காணொளி வாயிலாக ஆஜராக சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் அவர் ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மடங்களை நியமிக்க தக்கரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவில் தங்களால் தலையிட முடியாது என்று இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும் நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை எனவும் நித்தியானந்தாவின் கதவை திற காத்து வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது என்று காஞ்சி பெரியவர் கூறியது போல சன்னியாசி எப்போதும் சன்னியாசியாக இருக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கின்றார்.

পড়তে ভুলবেন না

ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் பிறந்தநாள் புகைப்படம்

நடிகர் ரவி மோகன் உடனான உறவு: கெனிஷா பிரான்சிஸின் வைரல் பிறந்தநாள் பதிவு மற்றும் உருக்கமான விளக்கம்!

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!