ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கிறேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்..!

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கிறேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்..!

இன்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் அவரை வரவேற்பதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கின்றார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்து இருக்கின்றது. அமலாக துறையானது அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில் அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக உள்ளது.

எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்துள்ளது. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கின்றேன். உன் தியாகம் பெரியது.. உறுதி அதனிலும் பெரியது..” என்று தெரிவித்திருக்கின்றார்.