இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிக விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது: “தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகின்றோம்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல, ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாள். சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகின்றது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டும் கிடையாது, சமூகத்தையும் உள்ளடக்கியது.
2026 ஜனவரி மாதத்திற்குள் சுமார் 75க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. வருகிற பொங்கல் திருநாளில் முதல்வர் மருந்தகத் திட்டம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் உருவாக்கப்பட உள்ளது.
ஓய்வு பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் 11 ஆயிரம் ஓய்வூதியம் 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் கட்டபொம்மன், வாஉசி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் 10500 ஆக உயர்த்தப்படும். நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும்” என்று அந்த உரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கின்றார்.