தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.
சென்னை சைதாப்பேட்டை தொழிலாளர் காலணியில் இன்று மருத்துவ முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசி அவர் தெரிவித்ததாவது ‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கின்றது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.
15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கின்றது. வருகிற 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவம் மூலம் ஒரு கோடி பெயரை சென்றடைவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது இரண்டு கோடி பேர் வரையில் பயனடைந்து இருக்கிறார்கள். இதுவரை ஒரு கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 577 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ஐநா சபையின் பாராட்டையும் நாம் பெற்றுள்ளோம். இதனை தடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை பொதுமக்களும் வழங்க வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து இருக்கின்றது. இந்த ஆண்டு இதுவரை 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காாமல் மக்கள் பாதுகாத்துக் கொண்டால் கொசு உற்பத்தியை தடுத்துவிடலாம். பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

