தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியில் சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. அதன்படி தமிழக அரசியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.17 லட்சம் காவல் பணியாளர்களுக்கு 5000 வீதம் 58.50 கோடி கொரோனா உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
44.46 கோடியில் புதிய காவல் ஆணையர்களுக்கு வாகனங்கள், 58 புதிய மகளிர் காவல் நிலையங்கள், 21 தீயணைப்பு மீட்பு பணி நிலையங்கள், சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு ஒரு லட்சம் புத்தகங்கள், தீ விபத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4,224 மனித உயிர்களுக்கு 605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசு துறைகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றார். தம்முடைய பொறுப்பிலேயே உள்ள காவல்துறையை சீராக வளர்த்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் சிறப்பாக பராமரித்து இந்திய அளவில் தமிழ்நாட்டில் புகழ் சேர்த்து இருக்கின்றார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.
குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களை தடுக்கும் துறையாகவும் செயல்பட வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு நிலை மிகச் சிறப்பாக இருப்பதால்தான் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகின்றது என்ற தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.