இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாக பிறந்தவர் தான் கிருஷ்ணர். தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளை தாங்கி அன்பு ஒன்றே நிலையானது என்பதை வையகத்திற்கு உணர்த்தும் அவதாரம் ஆகும். கிருஷ்ணர் தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் ஒருமித்து தங்கள் இல்லங்களில் கொண்டாடும் அற்புதமான நிகழ்வு.
அத்தகைய சிறப்பு கூறிய கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றனர். குழந்தை கிருஷ்ணர், ராதையுடன் இருக்கும் கிருஷ்ணர், நண்பர்களுடன் விளையாடும் கிருஷ்ணர், வெண்ணெய் உண்ட கிருஷ்ணர், கோபியர்களுடன் இருக்கும் கிருஷ்ணர், தவிலும் கிருஷ்ணர் என்று பலவிதமான உருவங்களில் சிறிய பெரிய கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனையாகி வருகின்றன.
மேலும் சென்னை புரசவாக்கம், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற பல பகுதிகளில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி சென்னையில் உள்ள பல கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன .அதன்படி இன்று காலை 9 மணி முதல் மறுநாள் காலை 7.30 மணி வரை அஷ்டமி திதி இருக்கின்றது.
கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம். சென்னை ஈசிஆரில் உள்ள இஸ்கான் கோவிலில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கோவில்களை தாண்டி வீடுகளிலும் கிருஷ்ணர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. தங்கள் குழந்தைகளை கிருஷ்ணராக பாவித்து பாதங்களில் மாவ விட்டு நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்து மகிழுந்து வருகிறார்கள் மக்கள்.