Ilayaraja Golden Jubliee
Ilayaraja Golden Jubliee - Felicitation by TamilNadu Government

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

உலகத்தையே தன் இசையால் ஆண்டு வரும் இசைஞானி அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் “ஞான தேசிகன்” என்ற இயற்பெயர் பெற்ற “திரு. இசைஞானி இளையராஜா.” 

இதனை அடுத்து, இசைஞானி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாது, இசை மீது அவர் கொண்ட ஆர்வத்தால் மேற்கத்திய இசைக்கருவிகளை கையாளும் பயிற்சியும் பெற்றுள்ளார்.

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

இளையராஜாவின் திரையுலகில்  50 ஆண்டு நிறைவு செய்ததை ஒட்டி , வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு “நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்” (Nehru Stadium) மாபெரும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள், இசைஞானியின் பிறந்த நாளை ஒட்டி ஜூன் 3-ஆம்  தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக அறிவுத்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால், அது தள்ளி  போடப்பட்டது.  முடிவாக, வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி மகா-விழா எனக் குறிப்பிட்டு தமிழக அரசே இதனை ஏற்றுக்கொண்டு நடத்த உள்ளது.  இவ்விழா இசைஞானி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் திரைத்துறையில் உள்ள அனைத்து தரப்பினரும் , அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனைக் குறித்து இசைஞானி அவர்கள் சமூக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதே அளவுக்கு எனக்கும்  மகிழ்ச்சி தான்” என்று தன் கொள்ளான மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.

இசை மாமன்னான இளையராஜா, அவர்களுக்கு தமிழக அரசே, அவரை கௌரவப்படுத்தும் விதமாக நடத்தப்படும் விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், அதிக அளவிலான எதிர்பார்ப்பையும் கூட்டி உள்ளது.