தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை குறைந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் மாலை மற்றும் இரவு பொழுதுகளில் மழை பெய்ய தொடங்கி இருக்கின்றது.
நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மலை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கின்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. மேலும் கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளிலும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.