- Homepage
- Latest News
- தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் புதிய ஆழ்ந்த கட்டணத்தை தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோவை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடம் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது.