காலாண்டு விடுமுறை எதிரொலி…. பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்… குவியம் கூட்டம்..!

காலாண்டு விடுமுறை எதிரொலி…. பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்… குவியம் கூட்டம்..!

காலாண்டு விடுமுறை எதிரொலியால் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.

தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடு பழனி. தமிழக மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தருவார்கள். மேலும் தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்காரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருவார்கள்.

விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் அங்கு திருவிழா கோலம் பூண்டிருக்கும். நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் பழனி பேருந்து நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிப்பாதை, யானை பாதை, வின்ச்நிலையம், ரோப் கார் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. மலைக்கோவிலில் ஏராளமானவர் திரண்டு இருக்கிறார்கள். பொது தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். அதிக அளவில் பக்தர்கள் வந்திருப்பதால் பழனியில் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.