சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒரு ஊழியர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒரு ஊழியர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஊழியர் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண் பெண் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பகோட்டை அருகே குகன் பாறை செவல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான ஆலை ஒன்றை இயங்கி வருகின்றது. இதில் 50-க்கும் மேற்ப அவர்கள் வேலை பார்க்கிறார்கள். இன்று காலை பணிக்கு வந்த அவர்களின் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.

அடுத்த வினாடி அங்கு தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி வெடித்து சிதறியது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் வெடித்து சிதறியது.  அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த ராஜ் என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். இது குறித்து சக தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தீயிணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். உயிரிழந்த கோவிந்தராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.