மது ஒழிப்பு மாநாடு… முறையாக அழைப்பு கொடுத்தா பங்கேற்போம்… எடப்பாடி பழனிச்சாமி முடிவு…!

மது ஒழிப்பு மாநாடு… முறையாக அழைப்பு கொடுத்தா பங்கேற்போம்… எடப்பாடி பழனிச்சாமி முடிவு…!

மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு கொடுத்தால் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கின்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவிற்கு வந்து கலந்து கொண்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நீங்கள் செல்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கலந்து கொள்வது தொடர்பாக முடிவு எடுப்போம். நடிகர் விஜய்யும் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா என தெரியவில்லை.

அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதுவே இந்துக்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எனவே விஜயும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா என்று அவர் கூறியிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பா மோகன், எம் எல் ஏ குமரகுரு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.