திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக வரும் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததை திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்? திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டு இல்லாமல் இருக்கின்றது என்பதையே இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து உணர்த்தி வருகின்றது.
தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இது போன்ற விபத்துக்கள் நிகழாத வண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றார்.