tamilnadu
தமிழக பொருளாதாரத்தை இன்னும் பெருக்க வேண்டும்… அண்ணாமலை பேட்டி…!
தமிழகத்தில் பொருளாதாரத்தை இன்னும் பெருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கின்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியிருந்ததாவது “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.2 % தான் இருக்கின்றது. ஆனால் கர்நாடகா 9.9% தெலுங்கானா 3.8% ,ராஜஸ்தான் 5.9%, மேற்கு வங்கம் – 4.85, கேரளா – 4.5% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் வளர்ச்சி மிக குறைவாகத்தான் இருக்கின்றது.
உத்தர பிரதேசம் 12.4 வளர்ச்சியோடு முன்னிலையில் இருக்க தமிழ்நாடு மற்றும் ஏன் பின் தங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தேக்க நிலை உருவாகி இருக்கின்றது. ஜிஎஸ்டி மூலம் வரும் மாநில வருவாய் மகாராஷ்டிராவிற்கு – 12.4% ஆகவும் உத்தரபிரதேசத்திற்கு 14.6%-மாகவும் இருக்கின்றது.
ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் மைனஸ் 11 சதவீதமாக இருக்கின்றது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குழையை தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்து வருகின்றது. தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி மூலம் மாநில வருவாய் மைனஸில் இருக்கின்றது. பெரிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் துவங்க சிவப்பு கம்பளம் பிரித்து வரவேற்க வேண்டும்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கி தர வேண்டும். வங்கதேசத்தில் தொழில் முதலீடு செய்பவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். தமிழக தொழிலதிபர்கள் மற்றும் மாநிலங்களில் தொழில் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் மாநிலத்தின் பொருளாதாரத்தை பெருக்குவதில் முதல்வர் எந்த கவனமும் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.