குற்றால அருவியில் சீசன் நேரத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் போது ஒரு முறையாவது குளித்து விட வேண்டும் என்பதுவே பலரின் ஆசையாக இருக்கும். ஆண்டு தோறும் ஜூனில் துவங்கி ஜூலைஅதிக பட்சமாக ஆகஸ்ட் மாதம் வரையிலே இங்கே தண்ணீரின் வருகை இருக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுத்திகளிலோ அல்லது குற்றாலத்தை சுற்றி மழை பெய்தாலோ மட்டும் தான் அருவிகளில் தண்ணீரை பார்க்க முடியும் மீதி நாட்களில். அதிலும் தமிழ் நாட்டை சார்ந்தவர்களை மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் மனதை கவரும் இடமாக கூட குற்றாலம் நிச்சயமாக இருந்து வருகிறது என்பதை பல நேரங்களில் மறுக்க முடியாததாகத் தான் இருக்கும்.
அந்த அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது தான் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் துவங்கி விட்டது.

அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ தினந்தோறும் கூட்டம் குவிந்து தான் வருகிறது. அதிலும் இன்று விடுமுறை நாள் என்பதால் காலை பதினோரு மணி நிலவரப்படி கட்டுக்கடங்காத கூட்டமே காணப்பட்டது. வெயிலில் தாக்கம் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாகவே இருக்கிறது. சாரலும், காற்றும் குறைவகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் அருவிகளில் விழுந்த தண்ணீரின் அளவும் இன்று குறைவே தான்.
மந்தமான நிலையே இருந்தாலும் இன்று கூட்டத்திற்கு இதுவரை பஞ்சமில்லை. கலகலப்பான சூழலே இருந்து வருகிறது அங்கே இன்று. எது எப்படி இருந்தாலும் ஆனந்த குளியல் போட்டே தீர வேண்டும் என குற்றாலத்தை நோக்கி தினசரி வரும் ஒரு வகையான கூட்டமும் இருக்கத் தான் செய்கிறது.